Friday, February 12, 2010
சா கந்தசாமியின் சாயாவனம்
சா கந்தசாமி எழுதிய சாயாவனம் சமீபத்தில் படித்தேன். படிக்க படிக்க முதலில் ஞாபகம் வந்தது தில்லு முல்லு படம். அதில் ரஜினி இசை சம்பந்தமாகக் கேட்ட கேள்விக்கு "இவ்வளவு ராகங்கள் இருக்குன்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!" என்பார் தேங்காய் சீனிவாசன். அதே போல தஞ்சாவூர் ஜில்லாவில் இவ்வளவு மரங்கள் இருப்பதை இப்பத்தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். என்ன செய்வது, எல்லாம் ஒரு அர்பன் வாழ்க்கையின் காரணம். நாவல் படிக்க ருசியாகத்தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுப்புரச் சூழலை மையமாகக் கொண்டு எழுதிய ஒரு புரட்சிகரமான நாவல் என்று அறிஞர் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த வகையிலே மிகவும் மென்மையான ஒரு த்வனியில் ஆழமான கருத்தை எடுத்துரைத்திருக்கிறார் திரு கந்தசாமி அவர்கள்.
Friday, January 29, 2010
கா நா சுப்ரமணியம் எழுதிய பொய்த்தேவு
கா நா சுப்ரமணியம் எழுதிய பொய்த்தேவு என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். எழுவது வருஷங்களுக்குமுன் வெளி வந்த இந்த நாவல் இன்றும் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் அதில் இடம் பெரும் பாத்திரங்களும் அவர்களுடைய சிந்தனைகளும் போக்கும் காலத்தைக் கடந்ததாக உள்ளது. இது போன்ற சில நாவல்களில் எனக்கு பிடித்த விஷயங்கள் என்னவென்றால் அந்த காலகட்டத்தின் சில வாழ்க்கை குறிப்புகள் சரித்திரத்தில் இடம் பெரும் ஆவணக்குறிப்புகளாக அமைந்துள்ளன. கதையில் ஒரு ராயர் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார். உடனே அந்த குரிப்பைத்தொடர்ந்து "அந்த ஊரிலேயே அவர் ஒருவர் தான் காலையில் காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்" என்று வருகிறது. இது ஒரு முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். இதற்ககு சான்று வேங்கடாசலபதி எழுதிய "அந்த காலத்தில் காபி இல்லை" என்ற ஆவண நூல். அதில் எப்படி காபி குடிக்கும் பழக்கம் உயர் தட்டு மக்கள் ஆங்கிலேயருடன் பழகி ஏற்படுத்திக்கொண்டது என்று அழகாக விவரித்துள்ளார். இது போல எண்பது வருஷங்களுக்கு முன்னே கும்பகோணத்தில் முதன்முதலில் பாருடன் சேர்ந்த ஒரு ஹோட்டல் தொடங்கியதைப்பற்றியும் குறித்துள்ளார். அந்த காலத்திலேயே "ஓபன் மேரேஜ்" என்ற ஒரு முறையை பின்பற்றிய தம்பதியரும் கதையில் இடம் பெறுகிறார்கள். தி ஜா, கு பா ர, வெங்கட்ராம், போன்ற தஞ்சாவூர் ஜில்லா எழுத்தாளர் வரிசையில் கா நா சுவும் ஒரு முக்கியமனாவர்.
Wednesday, August 5, 2009
பாரதி 'யார்' ????
இன்று நண்பர் ஸ்ரீராம் ஒரு கதை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். ஒரு பிரபல டிவி சானலிலிருந்து ஒரு இளம் பெண் நிருபர் போன் செய்து, " சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் இரண்டு ப்ராபல்யமான சுதந்திர சம்பந்தப்பட்ட இடங்கள் என்ன இருக்கிறது" என்று கேட்டாள். அதற்கு ஸ்ரீராம் மெரினா பீச் அந்த காலத்தில் பல கூட்டங்களுக்காக உபயோகப்பட்டதென்றும், கோகலே ஹால் இன்னொரு முக்கியமான இடம் என்றும் கூறினார். அந்த நிருபருக்கு கோகலே யார் என்று தெரியவில்லையாம்! சரி அது போகட்டும், அவராவது வடக்கத்திக்காரர். அடுத்து ஏதாவது ஒரு சுதந்திர வீரரின் வம்சத்தில் இருக்கும் ஒரு நபர் யாரவது இருந்தால் பேட்டி எடுக்கலாம் என்று கேட்டாள். அதற்கு ஸ்ரீராம் ராஜ்குமார் பாரதி, சுப்ரமணிய பாரதியின் கொள்ளு பேரன் இருப்பதாகச்சொன்னார். அதற்கு அந்த நிருபர் "சுப்ரமணிய பாரதி யார்?" என்று கேட்டாளாம்! ஸ்ரீராம் எதற்கும் அந்த பெண் எந்த பள்ளியில் படித்தாள் என்று கேட்டதற்கு சென்னையில் இருக்கும் ஒரு 'பாஷ்' பள்ளியின் பெயரைச் சொன்னாளாம். இதைக் கேட்டதும் விவேக் ஒரு படத்தில் பாரதியின் படத்தை காட்டி யாரென்று கேட்டதற்கு ஒரு பய்யன் " கே டி குஞ்சுமோன் " என்று சொன்னதுதான் நினைவுக்கு வந்தது! தமிழ் நாட்டில் கல்வி பயின்று தமிழ் எழுத படிக்க தெரியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் இருக்கிறார்கள் என்று தெரியும். இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்!
Wednesday, July 8, 2009
விசாரணை கமிஷன் - குறும்படம்
சா கந்தசாமி அவர்கள் எழுதிய "விசாரணை கமிஷன்" என்ற நூலை சென்னை தூர்தர்ஷன் ஒரு குரும்படமாக்கியுள்ளது. சென்ற வாரம் இதன் முதல் காட்சியைக் காண நேர்ந்தது. படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா இயக்குனர் வசந்த் அவர்கள். வசந்த் அவர்களை நினைக்கும்போது முதலில் ஞாபகம் வருவது "கேளடி கண்மணி" என்ற படம்தான். SPB அவர்களை அதில் கதாநாயகனாகப் பார்த்தும், "மண்ணில் இந்த காதல்" என்ற அற்புதமான பாடலைப் பாடி, அதுவும் ஒரு சரனத்தில் மூச்சுவிடாமல் வெகு நேரம் பாடியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
விசாரணை கமிஷன் படத்தைப் பார்த்ததும் அந்த நூலை உடனே படிக்க வேண்டும் என்ற ஆசைதான் முதலில் வந்தது. படத்தில் குறிப்பாக கந்தசாமி அவர்கள் எழுதியுள்ள சில யதார்த்த வாழ்க்கை சித்திரங்கள், ஒரு பள்ளியில் ஆசிரியர்களுக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தைகள், ஒரு பஸ் கண்டக்டரின் தினசரி நடப்புகளும் பிரச்சனைகளும், கண்டக்டரும் அவர் ஆசிரியை மனைவிக்குமான எளிய காதல் சில்மிஷங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் ச்வாரச்யிமாக இருந்தன. நூல் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்ததால் அதிலிருக்கும் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் இன்று "out dated" ஆகத் தெயரியலாம். ஆனால் இன்று தின வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இந்த விஷயங்கள் அந்தக் காலத்தில்தான் தொடங்கியது என்பது மனதில் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு நண்பர் சொன்னது போல திமுக என்ற ஒரு சமுக இயக்கம் அரசியல் இயக்கமாக மாறிய பொழுது ஏற்பட்ட சில விஷயங்களையும் பின்னணியில் சொல்லாமல் சொல்லி இருந்தது அற்புதம்.
படத்தின் நடிகர்களுக்கு ஒரு தனி சபாஷ் சொல்லத்தான் வேண்டும். அந்த நடிகர்களின் தோற்றம், சொல்லாடல், எல்லாமே ஒரு யதார்த்த அளவில் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. ஒரு குறை என்னவென்றால் இந்த நூல் எழுதிய காலகட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு செல் போனே வரும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.
விசாரணை கமிஷன் படத்தைப் பார்த்ததும் அந்த நூலை உடனே படிக்க வேண்டும் என்ற ஆசைதான் முதலில் வந்தது. படத்தில் குறிப்பாக கந்தசாமி அவர்கள் எழுதியுள்ள சில யதார்த்த வாழ்க்கை சித்திரங்கள், ஒரு பள்ளியில் ஆசிரியர்களுக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தைகள், ஒரு பஸ் கண்டக்டரின் தினசரி நடப்புகளும் பிரச்சனைகளும், கண்டக்டரும் அவர் ஆசிரியை மனைவிக்குமான எளிய காதல் சில்மிஷங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் ச்வாரச்யிமாக இருந்தன. நூல் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்ததால் அதிலிருக்கும் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் இன்று "out dated" ஆகத் தெயரியலாம். ஆனால் இன்று தின வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இந்த விஷயங்கள் அந்தக் காலத்தில்தான் தொடங்கியது என்பது மனதில் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு நண்பர் சொன்னது போல திமுக என்ற ஒரு சமுக இயக்கம் அரசியல் இயக்கமாக மாறிய பொழுது ஏற்பட்ட சில விஷயங்களையும் பின்னணியில் சொல்லாமல் சொல்லி இருந்தது அற்புதம்.
படத்தின் நடிகர்களுக்கு ஒரு தனி சபாஷ் சொல்லத்தான் வேண்டும். அந்த நடிகர்களின் தோற்றம், சொல்லாடல், எல்லாமே ஒரு யதார்த்த அளவில் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. ஒரு குறை என்னவென்றால் இந்த நூல் எழுதிய காலகட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு செல் போனே வரும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.
Monday, March 9, 2009
ஹரிகாம்போதியில் வர்ணமும் கான்செருக்கு மருந்தும்
காலஞ்சென்ற சங்கீத மேதை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரைப் பற்றி பல அருமையான நகைச்சுவை கலந்த விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமானது.
கும்பகோணத்தில் இருந்த ஒரு பெரிய டாக்டர் விஸ்வநாத அய்யரிடம் சென்று 'ஹரிகாம்போதி ராகத்தில் வர்ணம் எதுவும் இல்லை. நீங்கள் ஒன்று இயற்றக் கூடாதா?' என்று கேட்டார். இதற்கு அவர் " நீங்க மொதல்ல கான்செருக்கு மருந்து கண்டு பிடிங்கோ, அப்புறம் நான் வர்ணம் பண்ணறேன்!"
கலா ரசிகர்களுக்கு எப்பொழுதுமே கலைஞர்களுக்கு ஆலோசனை சொல்லுவதில் ஒரு தனி ஆர்வம். அந்த காலத்தில் இது போன்ற ஆலோசனைகள் கலைஞர்களை ஆதரிக்கும் கனவாங்களிடமிருந்தும் மகாராஜக்களிடமிருந்தும் வருவது சகஜம். கவிஞர்கள், ஓவியர்கள், இசை வல்லுனர்கள் இது போன்ற விருப்பங்களை அடிக்கடி நிறைவேற்றி வைப்பார்கள். குறிப்பாக இந்த முயற்சிகளுக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ப நல்ல சன்மானமும் கிடைத்து. இப்பவும் ரசிகர்கள் அடிக்கடி விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சன்மானம் ???? .......... (சும்மா! ரொம்ப சீரியசா எடுத்துக்க வேண்டாம்! நான் சீட்டில் வரும் பாடல்களைப் பாடுபவர் கட்சி.)
கும்பகோணத்தில் இருந்த ஒரு பெரிய டாக்டர் விஸ்வநாத அய்யரிடம் சென்று 'ஹரிகாம்போதி ராகத்தில் வர்ணம் எதுவும் இல்லை. நீங்கள் ஒன்று இயற்றக் கூடாதா?' என்று கேட்டார். இதற்கு அவர் " நீங்க மொதல்ல கான்செருக்கு மருந்து கண்டு பிடிங்கோ, அப்புறம் நான் வர்ணம் பண்ணறேன்!"
கலா ரசிகர்களுக்கு எப்பொழுதுமே கலைஞர்களுக்கு ஆலோசனை சொல்லுவதில் ஒரு தனி ஆர்வம். அந்த காலத்தில் இது போன்ற ஆலோசனைகள் கலைஞர்களை ஆதரிக்கும் கனவாங்களிடமிருந்தும் மகாராஜக்களிடமிருந்தும் வருவது சகஜம். கவிஞர்கள், ஓவியர்கள், இசை வல்லுனர்கள் இது போன்ற விருப்பங்களை அடிக்கடி நிறைவேற்றி வைப்பார்கள். குறிப்பாக இந்த முயற்சிகளுக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ப நல்ல சன்மானமும் கிடைத்து. இப்பவும் ரசிகர்கள் அடிக்கடி விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சன்மானம் ???? .......... (சும்மா! ரொம்ப சீரியசா எடுத்துக்க வேண்டாம்! நான் சீட்டில் வரும் பாடல்களைப் பாடுபவர் கட்சி.)
Monday, February 2, 2009
ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழிசையைப் பற்றி எழுதுகிறார்.
http://jeyamohan.in/?p=1416#
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தமிழிசையைப் பற்றி பல நல்ல கருத்துக்களை எழுதியுள்ளார். ஒரே ஒரு விஷயத்தில் அவர் குறிப்பிட்ட சாரங்கதேவர் தமிழரல்ல. இதுபோன்ற எழுத்தாளர்கள் எழுதும்போது கிடைக்கும் ஒரு ஆழமான சிந்தனை வளம் பிற கலைகளுக்கு மிக அவசியம். பொதுவாக கர்நாடக இசையைப் பற்றி தமிழில் எழுதுவதற்கு அதிகபேர் இல்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜெயமோகன் போன்றோர்கள் இந்த மாதிரி எழுதி கர்நாடக இசைக்கு செய்யும் தொண்டு மிக உயர்ந்தது. நன்றி ஜெமோ!
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தமிழிசையைப் பற்றி பல நல்ல கருத்துக்களை எழுதியுள்ளார். ஒரே ஒரு விஷயத்தில் அவர் குறிப்பிட்ட சாரங்கதேவர் தமிழரல்ல. இதுபோன்ற எழுத்தாளர்கள் எழுதும்போது கிடைக்கும் ஒரு ஆழமான சிந்தனை வளம் பிற கலைகளுக்கு மிக அவசியம். பொதுவாக கர்நாடக இசையைப் பற்றி தமிழில் எழுதுவதற்கு அதிகபேர் இல்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜெயமோகன் போன்றோர்கள் இந்த மாதிரி எழுதி கர்நாடக இசைக்கு செய்யும் தொண்டு மிக உயர்ந்தது. நன்றி ஜெமோ!
Sunday, January 25, 2009
ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது!
இந்த வருடம் குடியரசு தினத்தை ஒட்டி பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் ஒரு மூத்த எழுத்தாளருக்கு இந்த விருது அளிப்பது நம் எல்லோருக்கும் பெருமை அளிக்கக் கூடிய ஒன்றுதான். இருந்தாலும் அவருடைய வயசுக்கும், அனுபவத்துக்கும் தகுதிக்கும் கொடுக்க வேண்டிய விருது பத்ம விபுஷன். அதைக் கொடுக்கவில்லை என்பது ஒரு வித வருத்தம் தான். இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக அவர் எழுதிய ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்ற நூலை படித்து கொண்டு இருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதோடு அந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலையின் பார்வை அற்புதமாக படம் பிடித்து காண்பிக்கிறது.
Subscribe to:
Posts (Atom)