tag:blogger.com,1999:blog-65863464719655344292024-03-13T05:26:46.233-07:00தமிழிலே எழுதுவோம்Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-57980372865570705212011-02-28T20:49:00.000-08:002011-02-28T20:49:41.911-08:00பிடி பொங்கல்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;">மார்கழி மாதத்தில் பெருமாள் கோவில் பொங்கல் ரொம்ப விசேஷம். அதுவும் பட்டர்கள் சுட சுட நம்ப கையில போடறதும் அத நம்ம பிடிக்கறதே ஒரு catch practice. கிரிகெட் விளையாடும்போது கேட்ச் விட்டா பசங்க ஒடனே "டேய் மார்கழி மாசம் கோயிலுக்கு போய் பொங்கல் வாங்கு, அப்பத்தான் பிடிக்க வரும் " ன்னுட்டு கிண்டல் அடிப்பாங்க. சில சமயம் ரெண்டு மூணு கேட்ச் விட்டா "இவனுக்கு நம்ம கோயில் போதாது. இவன பார்த்தசாரதி கோயிலுக்குத்தான் அனுப்பணும்" பாங்க! அன்னிக்கி பாகிஸ்தான் ஆட்டத்தைப் பாத்தீங்களா? இவங்கள காஞ்சிபுரத்துல வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அனுப்ப வேண்டியதுதான்!</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div></div>Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-60802378048787385802011-01-22T02:29:00.000-08:002011-01-22T02:29:16.120-08:00வேள்வித் தீ - எம் வீ வெங்கட்ராம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">சமீபத்தில் படித்தது "வேள்வித் தீ" - எம் வீ வெங்கட்ராம் எழுதிய ஒரு அழகிய நாவல். சில நாட்கள் முன்பு அவருடைய ஒரு சிறுகதை படித்த ஞாபகம். குறிப்பாக அதில் அவர் கையாண்ட பெண் பாத்திரம் என்னை ரொம்பவும் கவர்ந்தது. காலச்சுவடு கிளாசிக் வரிசையில் இதை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நாவலைப் படித்த பிறகு முதலில் இருக்கும் முன்னுரைகளைப் படிக்கக் கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டேன். ஆனால் கடைசியில் இந்த நாவலைப் பத்தி சுந்தர ராமசாமி அவர்களுடன் நடை பெற்ற ஒரு உரையாடலையும் சேர்த்து இருப்பது நன்றாக இருந்தது. எனக்கென்னமோ பொதுவாக முன்னுரைகள் பின்னுரைகளாகவே இருப்பது தேவலை.<br />
<br />
எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இந்த நாவலில் அவர் கையாண்ட அந்த இரண்டு பெண்களும் தான். இரண்டு கண்ணோட்டங்களை முன்வைத்துப் பார்க்கிறார் ஆசிரயர். முடிவில் பார்த்தல் பாசிடிவ் நெகடிவ் ரெண்டும் இருக்கிறது. ஒரு பக்கம் இயற்கையாகவும் சம்ப்ரதாயமகவும் எடுக்கும் "நெகடிவ்" முடிவு, மறுபக்கம் நவீனமாக எடுக்கும் "பாசிடிவ்" முடிவு. கலைஞன் படைக்க வேண்டும், ஆனால் அனுபவம் தீர்ப்பு ரெண்டுமே ரசிகனுடையது!</div>Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-42495303831312625452011-01-20T17:05:00.000-08:002011-01-20T17:05:04.208-08:00குளோபல் உணர்ச்சி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; line-height: 28px;"><a href="http://azhiyasudargal.blogspot.com/2011/01/blog-post_09.html">கர்நாடக இசை ரசிகர்கள் படிக்க வேண்டிய கதை!</a> இந்த கதையைப் படித்தவுடன் ஒரு சுவராஸ்யமான அனுபவம் ஞாபகத்துக்கு வருது - ஏழு வருஷத்துக்கு முன்பு ஸ்பெயினுக்கு போயிருந்தோம். அங்கு காரவக என்ற சிறிய கூக் கிராமம். உள்ளே செல்லும்பொழுது ஒரு காதொலிக் அக்ரஹாரதிர்குள் நுழைவது போன்ற அனுபவம். அங்கே ஒரு சின்ன அரங்கத்தில் கச்சேரி. மைக் டெஸ்ட் செய்து கொண்டிருந்தோம். வயலின் கலைஞர் வரதராஜன் கொஞ்சம் நீலாம்பரி வாசித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த ஒரு ஸ்பானிஷ்காரர் என்னிடம் "இதைக் கேட்டால் ஒரு கனவு காண்பது போல் தோன்றுகிறது" என்றார்! ஆமாய்யா எங்க ஊர்லே தாய்மார்கள் குழந்தையைத் தூங்கவைப்பதற்கான தாலாட்டு ராகம்தான் இது. பரவாயில்லியே நம்ம சங்கீதத்திற்கு ஒரு குளோபல் உணர்ச்சி இருக்குடோய்!</span></div>Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-30164776841037870302010-07-05T21:34:00.000-07:002010-07-05T21:34:37.677-07:00உண்ண வேண்டியவர்"உண்ண வேண்டும் சாமி என்பார்!" என்றார் பாரதிதாசன் <div>"உண்ண வேண்டும் காக்கை" என்று பார்க் மூலையில் பேக்கரி பன்னைப்</div><div>பிச்சு போடுகிறார் ஒரு நபர்</div><div>உண்ண வேண்டியவர் ????</div>Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-87555203132018477062010-07-04T17:46:00.000-07:002010-07-04T17:46:09.762-07:00தோனிக்கு கல்யாணமாம்கிரிக்கெட் ஆட்டக்காரர் தோனிக்கு கல்யாணமாம்<br />
டைம்ஸ் நொவ் என்ற சானெல் தோனியின் பழைய காதலர்களைப் (?) பட்டியல் இடுகிறது<br />
கல்யாணத்துல ஊடகத்துக்கு சந்தோஷமா இல்லியா ?Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-71262767357024352492010-07-02T18:05:00.000-07:002010-07-02T18:05:36.824-07:00தனியா நடக்கறாங்கபீச்சுல ஆயிரம்பேருக்கு மேல நடக்கறாங்க<br />
எண்ணூறு பேருக்கு மேல் ஆம்பளைங்க<br />
மீதி தாய்க்குலம்<br />
ஆணும் பெண்ணும் சேர்ந்து நடக்கறது?<br />
இருபது இருக்குமா ?Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-67367970275919533962010-05-14T18:39:00.000-07:002010-05-14T18:39:52.287-07:00நல்ல எனர்ஜி சார்!சமீபத்துல ஒரு கச்சேரி முடிஞ்சதும், ரசிகர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார், " சார் ஒங்க பாட்டுல நல்ல எனர்ஜி இருக்கு!" நானும் பல வருஷங்களாகக் கச்சேரி பாடியும் கேட்டும் இருக்கேன். இந்த மாதிரி பாராட்டுவதைக் கேட்டதே இல்லை. அப்பறந்தான் விஷயம் புரிஞ்சுது. எல்லாம் டீவீல வரும் "மானாட மயிலாட"வின் மகிமை!Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-6889775054059596722010-05-14T18:33:00.000-07:002010-05-14T18:33:42.930-07:00முக்கிய அறிவிப்பு! பெண்கள் கிரிக்கெட் !இன்றைய செய்தித்தாள் ஒன்றில் "உலகக் கோப்பை தொடங்குவதற்கு பத்து நாட்கள் முன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கோச்சைத் தூக்கிட்டாங்களாம்!" அப்படியும் நம் பெண்மணிகள் அறை இறுதி ஆட்டத்துக்கு வந்து ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தார்கள். நம்ப ஆளுங்களுடைய கேவல ஆட்டத்துக்கு, கொஞ்சம் பெண்கள கவனிக்கலாம்னு நினைக்கிறேன்.Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-21957285017655501662010-05-13T02:19:00.000-07:002010-05-13T02:19:58.936-07:00இப்படியும் ஒரு போலீஸ்கார்!என் நண்பர் ஒருவர் நேற்று லஸ் கார்னர் சிக்னலில் திரும்பும்போது போலீஸ்கார் நிறுத்தினார்.<br />
"கொஞ்சம் நிறுத்துங்க! சிக்னல் ரெட் தெரியலே?"<br />
"இல்லே சார் கிரீன் தானே!"<br />
"அங்க எஸ் ஐ இருக்காரு போய் பாருங்க."<br />
நண்பர் எஸ் ஐய பார்த்தார்.<br />
"நூறு ரூபா கட்டுங்க. சிக்னல்ல தப்பா வந்தீங்க."<br />
எதுக்கு வம்புன்னுட்டு நூறு ரூபாய கட்டிட்டு வண்டியில ஏறினார்.<br />
முதல்ல நிறுத்தின போலீஸ்கார், "சாரி சார்! எஸ் ஐ கூப்ட சொன்னார். அதான் நிறுத்தினேன். என்ன தப்பா நினைக்காதீங்க. உங்க வண்டிய நிறைய பார்த்திருக்கேன். நீங்க சிக்னல் தப்பவே மாட்டீங்க. தப்பா எடுத்துக்காதீங்க சார்!"Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-45126954045685607172010-05-11T07:18:00.000-07:002010-05-11T07:18:56.344-07:00படித்து ரசித்தது - அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு - ஆபிதீன்<span class="Apple-style-span" style="font-size: medium; line-height: 28px;">இது ஒரு சின்ன சாம்பிள்</span><br />
<span class="Apple-style-span" style="font-size: medium;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; font-family: TSCuTradi, 'Arial Unicode MS', Geneva, Helvetica, sans-serif; line-height: normal;"><span class="Apple-style-span" style="font-size: medium;">"அன்று நான் வீட்டிற்கு வெளியேயுள்ள வராந்தாவில் ரிலாக்ஸ்டாக - 'சாய்' கிடைக்காமல் - சாய்ந்திருந்தேன். தெருவைத்தான் நான் வராந்தா என்று சொல்கிறேன். வீடு அப்படி. வீட்டின் நிலைமை அப்படி. முப்பது வருட அரபுநாட்டு சம்பாத்தியம் என்றால் சும்மாவா? தேரடியிலிருந்து அதிர்ந்தபடி தெருவிற்குள் நுழைந்து, கடற்கரைநகருக்கோ அல்லது அங்கிருந்து குஞ்சாலித்தெருவில் திரும்பி தர்ஹாவுக்கோ விரையும் வாகனங்கள் எழுப்பும் புழுதிதான் எனக்கு புகழுரை. எதிர்வீட்டு ·பர்ஹான்பாய் வீட்டிலிருந்து ஒரு இஸ்லாமியத் தமிழ்ப் பாட்டு கேட்டது. பின்னே, துலுக்கத் தெருவில் 'வினாயகனே வினை தீர்ப்பவனே'யா வரும்? என்றெல்லாம் நீங்கள் துடுக்குத்தனமாக கேட்கக் கூடாது. என்னைப்போல சிலரின் வீட்டிலிருந்து வரும். '(பாலாஜியை நான் தரிசிப்பதற்காக) என்னை யாரும் திட்டலாம். ஆனால் சு(ரு)தியோடு திட்டனும்' என்று கண்டிஷன் போடும் பனாரஸ்கான்கள் போல ஓரிரு கான்கள் எங்கள் ஊரில் இப்போதும் உண்டென்று காண். But they are not Terrorists</span></span><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; font-family: TSCuTradi, 'Arial Unicode MS', Geneva, Helvetica, sans-serif; font-size: 19px; line-height: normal;">!"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: TSCuTradi, 'Arial Unicode MS', Geneva, Helvetica, sans-serif; font-size: x-large;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; font-size: 19px; line-height: normal;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: TSCuTradi, 'Arial Unicode MS', Geneva, Helvetica, sans-serif;"><span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px; line-height: normal;"><span class="Apple-style-span" style="font-size: medium;"><a href="http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html">முழு கதை </a></span></span></span>Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-1153213406506776042010-05-09T05:42:00.000-07:002010-05-09T05:42:50.200-07:00சிட்டி 100சிட்டி என்ற PG சுந்தர்ராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு நேற்று போய்வந்தேன். ஒரு ஆறு வருடங்களுக்குமுன் அவரைச்சந்தித்து பேசிய அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது. அப்பொழுதுதான் எனக்கு கொஞ்சம் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் ஏற்பட்ட காலம். பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவில் கச்சேரிக்காக வந்த திரு வேணுகோபால் சிட்டி அவர்களின் மகன் என்று தெரிந்து கொண்டேன். சிட்டியும் திஜாவும் எழுதிய நடந்தாய் வாழி காவேரி என்ற பயண நூலை படித்திருக்கிறேன். அதனால் சிட்டி என்ற பெயர் சொன்னவுடன் புரிந்து கொண்டேன். அதுவும் அந்த நூலில் சங்கீதத்தைப் பற்றிய சில விஷயங்கள் சுவாரஸ்யமாக எழுதப்பட்டதனால் ஞாபகம் இருந்தது. தெரிந்தவுடன் அவரைப் போய் சந்தித்தேன். அவருக்கு அப்போது தொண்ணூறு வயதுக்குமேல் இருக்கும். ஆனால் எந்த ஒரு மன தளர்ச்சியும் தெரியவில்லை. அப்போது பல அறிய விஷயனகளைப்பற்றி பேசினார். அவர் ஒரு மதுரை மணி அய்யர் ரசிகர் என்றும் "மதுரை மணி கச்சேரி" என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து "Maduraa bell court" என்று சொல்லுவார்களாம். திருச்சியில் ஒரு இடத்தில் மதுரை மணி அய்யர் ரசிகர்கள் கூடும் மண்டபம் ஒன்றில் அவர் அடிக்கடி கச்சேரி செய்வார். அந்த இடத்தை வயலின் வித்வான் திருவாலங்காடு சுந்தரேச இயர் "மணி மண்டபம்" என்று சொல்லுவாராம்!<br />
<br />
அன்று சிட்டி அவர்கள் எனக்கு அவருடைய வாழ்க்கை நூலாகிய "ஒரு சாதாரண மனிதனின் கதை" கையெழுத்திட்டுக் கொடுத்தார். அதைப் படித்தப்பிறகு எனக்கு மணிக்கொடி பத்திரிகைப் பற்றி படிக்க வேண்டும் என்று ஆசை. பிறகு ஒரு முறை புத்தகக் கண்காட்சியில் PS ராமையா எழுதிய "மணிக்கொடி காலம்" என்ற நூலை வாங்கிப் படித்தேன். சிட்டி அவர்களைச் சந்தித்தப் பிறகு அவர் என் கச்சேரியைக் கேட்க வந்தார். நான் அன்று சன்முகப்ரியாவில் "மரிவேரே" கிருதியைப் பாடினேன். கச்சேரி முடிந்ததும் அந்த பாடல் மதுரை மணி அய்யர் அழகாகப் பாடுவார் என்று நினைவு கூர்ந்து சந்தோஷப் பட்டார்.<br />
<br />
சிட்டியின் வாழ்க்கை வரலாற்றில் எனக்குப் பிடித்த ஒரு முக்கியமான் இடம் அவர் பாரதியார் விஷயத்தில் கல்கிக்கு எழுதிய கடிதம். அந்த ஒரு நகைச்சுவை, கிண்டல், கூர்மையான வாதம் எல்லாம் அற்புதாமாகத் தெரிகிறது. இதிலே கல்கி பாரதியை மேல் நாட்டுப் புலவர்களுக்கு ஈடாக வைக்கக் கூடாது என்று எழுதியதை எதிர்த்து சிட்டி குடுக்கிற பதில்தான் அந்த கடிதம். இந்தியாவில் நாம் பொதுவாக நம் சமகாலத்தவரின் பெருமைகளைப் பேசுவதற்கு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. இசையில் தஞ்சாவூர் கல்யாணராமன் போன்றவர்கள் அவர்கள் காலத்திற்குப் பிறகு அதிக அளவில் போற்றப்படுகிறார்கள். அதே போல பாரதிக்கும் இதே கதி தான் என்று தெரிந்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்போதும் டெண்டுல்கரை ஒத்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள். சிட்டி தைரியமாக பாரதியின் பெருமையை விளக்கி கல்கியின் வாதத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறார்.<br />
<br />
நடந்தாய் வாழி காவேரி நூலை நான் ஆங்கிலத்தில்தான் படித்தேன். சமீபத்தில் தமிழ் பிரதி ஒன்று கிடைத்தது. விரைவில் படிக்க வேண்டும்.Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-8224593509963513942010-05-07T00:34:00.000-07:002010-05-07T01:30:09.964-07:00இணையத்தில் யூடியுப் வீடியோக்கள்என்னுடைய பல வீடியோக்கள் இணையத்தில் சிதறிக் கிடக்கின்றன. எல்லாத்தையும் ஒன்று சேர்த்து ஒரு யூடியுப் சேனல் ஒன்றை அமைத்துவிட்டேன்.<br />
<br />
<a href="http://www.youtube.com/sanjaysub">http://www.youtube.com/sanjaysub</a>Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-41745683583079996532010-03-06T07:03:00.000-08:002010-03-06T07:04:49.600-08:00கிரிக்கெட் கிறுக்கல்<div>ஒரு வாரத்தில் IPL ஆரம்பம்<br /></div>அடுத்த மாதம் T20 உலகக் கோப்பை<br />இன்று தெற்கு அணிக்கும் மத்திய அணிக்கும்<br />ஒரு நாள் தியோதர் போட்டி நடக்குது!Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-24818093470132516002010-02-12T19:25:00.000-08:002010-02-12T19:27:50.717-08:00சா கந்தசாமியின் சாயாவனம்சா கந்தசாமி எழுதிய சாயாவனம் சமீபத்தில் படித்தேன். படிக்க படிக்க முதலில் ஞாபகம் வந்தது தில்லு முல்லு படம். அதில் ரஜினி இசை சம்பந்தமாகக் கேட்ட கேள்விக்கு "இவ்வளவு ராகங்கள் இருக்குன்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!" என்பார் தேங்காய் சீனிவாசன். அதே போல தஞ்சாவூர் ஜில்லாவில் இவ்வளவு மரங்கள் இருப்பதை இப்பத்தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். என்ன செய்வது, எல்லாம் ஒரு அர்பன் வாழ்க்கையின் காரணம். நாவல் படிக்க ருசியாகத்தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுப்புரச் சூழலை மையமாகக் கொண்டு எழுதிய ஒரு புரட்சிகரமான நாவல் என்று அறிஞர் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த வகையிலே மிகவும் மென்மையான ஒரு த்வனியில் ஆழமான கருத்தை எடுத்துரைத்திருக்கிறார் திரு கந்தசாமி அவர்கள்.Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-12937376294704159222010-01-29T19:15:00.000-08:002010-01-30T00:24:17.945-08:00கா நா சுப்ரமணியம் எழுதிய பொய்த்தேவுகா நா சுப்ரமணியம் எழுதிய பொய்த்தேவு என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். எழுவது வருஷங்களுக்குமுன் வெளி வந்த இந்த நாவல் இன்றும் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் அதில் இடம் பெரும் பாத்திரங்களும் அவர்களுடைய சிந்தனைகளும் போக்கும் காலத்தைக் கடந்ததாக உள்ளது. இது போன்ற சில நாவல்களில் எனக்கு பிடித்த விஷயங்கள் என்னவென்றால் அந்த காலகட்டத்தின் சில வாழ்க்கை குறிப்புகள் சரித்திரத்தில் இடம் பெரும் ஆவணக்குறிப்புகளாக அமைந்துள்ளன. கதையில் ஒரு ராயர் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார். உடனே அந்த குரிப்பைத்தொடர்ந்து "அந்த ஊரிலேயே அவர் ஒருவர் தான் காலையில் காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்" என்று வருகிறது. இது ஒரு முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். இதற்ககு சான்று வேங்கடாசலபதி எழுதிய "அந்த காலத்தில் காபி இல்லை" என்ற ஆவண நூல். அதில் எப்படி காபி குடிக்கும் பழக்கம் உயர் தட்டு மக்கள் ஆங்கிலேயருடன் பழகி ஏற்படுத்திக்கொண்டது என்று அழகாக விவரித்துள்ளார். இது போல எண்பது வருஷங்களுக்கு முன்னே கும்பகோணத்தில் முதன்முதலில் பாருடன் சேர்ந்த ஒரு ஹோட்டல் தொடங்கியதைப்பற்றியும் குறித்துள்ளார். அந்த காலத்திலேயே "ஓபன் மேரேஜ்" என்ற ஒரு முறையை பின்பற்றிய தம்பதியரும் கதையில் இடம் பெறுகிறார்கள். தி ஜா, கு பா ர, வெங்கட்ராம், போன்ற தஞ்சாவூர் ஜில்லா எழுத்தாளர் வரிசையில் கா நா சுவும் ஒரு முக்கியமனாவர்.Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-9189479687992931972009-08-05T07:47:00.000-07:002009-08-05T08:04:32.292-07:00பாரதி 'யார்' ????இன்று நண்பர் ஸ்ரீராம் ஒரு கதை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். ஒரு பிரபல டிவி சானலிலிருந்து ஒரு இளம் பெண் நிருபர் போன் செய்து, " சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் இரண்டு ப்ராபல்யமான சுதந்திர சம்பந்தப்பட்ட இடங்கள் என்ன இருக்கிறது" என்று கேட்டாள். அதற்கு <span>ஸ்ரீராம் </span>மெரினா பீச் அந்த காலத்தில் பல கூட்டங்களுக்காக உபயோகப்பட்டதென்றும், கோகலே ஹால் இன்னொரு முக்கியமான இடம் என்றும் கூறினார். அந்த நிருபருக்கு கோகலே யார் என்று தெரியவில்லையாம்! சரி அது போகட்டும், அவராவது வடக்கத்திக்காரர். அடுத்து ஏதாவது ஒரு சுதந்திர வீரரின் வம்சத்தில் இருக்கும் ஒரு நபர் யாரவது இருந்தால் பேட்டி எடுக்கலாம் என்று கேட்டாள். அதற்கு ஸ்ரீராம் ராஜ்குமார் பாரதி, சுப்ரமணிய பாரதியின் கொள்ளு பேரன் இருப்பதாகச்சொன்னார். அதற்கு அந்த நிருபர் "சுப்ரமணிய பாரதி யார்?" என்று கேட்டாளாம்! ஸ்ரீராம் எதற்கும் அந்த பெண் எந்த பள்ளியில் படித்தாள் என்று கேட்டதற்கு சென்னையில் இருக்கும் ஒரு 'பாஷ்' பள்ளியின் பெயரைச் சொன்னாளாம். இதைக் கேட்டதும் விவேக் ஒரு படத்தில் பாரதியின் படத்தை காட்டி யாரென்று கேட்டதற்கு ஒரு பய்யன் " கே டி குஞ்சுமோன் " என்று சொன்னதுதான் நினைவுக்கு வந்தது! தமிழ் நாட்டில் கல்வி பயின்று தமிழ் எழுத படிக்க தெரியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் இருக்கிறார்கள் என்று தெரியும். இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்!Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-46714449438063521902009-07-08T23:54:00.000-07:002009-07-11T18:28:21.012-07:00விசாரணை கமிஷன் - குறும்படம்<a href="http://en.wikipedia.org/wiki/Sa._Kandasamy"><span>சா</span> <span>கந்தசாமி</span></a> அவர்கள் எழுதிய "விசாரணை கமிஷன்" என்ற நூலை சென்னை தூர்தர்ஷன் ஒரு குரும்படமாக்கியுள்ளது. சென்ற வாரம் இதன் முதல் காட்சியைக் காண நேர்ந்தது. படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா இயக்குனர் வசந்த் அவர்கள். வசந்த் அவர்களை நினைக்கும்போது முதலில் ஞாபகம் வருவது "கேளடி கண்மணி" என்ற படம்தான். SPB அவர்களை அதில் கதாநாயகனாகப் பார்த்தும், "மண்ணில் இந்த காதல்" என்ற அற்புதமான பாடலைப் பாடி, அதுவும் ஒரு சரனத்தில் மூச்சுவிடாமல் வெகு நேரம் பாடியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.<br /><br />விசாரணை கமிஷன் படத்தைப் பார்த்ததும் அந்த நூலை உடனே படிக்க வேண்டும் என்ற ஆசைதான் முதலில் வந்தது. படத்தில் குறிப்பாக கந்தசாமி அவர்கள் எழுதியுள்ள சில யதார்த்த வாழ்க்கை சித்திரங்கள், ஒரு பள்ளியில் ஆசிரியர்களுக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தைகள், ஒரு பஸ் கண்டக்டரின் தினசரி நடப்புகளும் பிரச்சனைகளும், கண்டக்டரும் அவர் ஆசிரியை மனைவிக்குமான எளிய காதல் சில்மிஷங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் ச்வாரச்யிமாக இருந்தன. நூல் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்ததால் அதிலிருக்கும் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் இன்று "out dated" ஆகத் தெயரியலாம். ஆனால் இன்று தின வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இந்த விஷயங்கள் அந்தக் காலத்தில்தான் தொடங்கியது என்பது மனதில் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு நண்பர் சொன்னது போல திமுக என்ற ஒரு சமுக இயக்கம் அரசியல் இயக்கமாக மாறிய பொழுது ஏற்பட்ட சில விஷயங்களையும் பின்னணியில் சொல்லாமல் சொல்லி இருந்தது அற்புதம்.<br /><br />படத்தின் நடிகர்களுக்கு ஒரு தனி சபாஷ் சொல்லத்தான் வேண்டும். அந்த நடிகர்களின் தோற்றம், சொல்லாடல், எல்லாமே ஒரு யதார்த்த அளவில் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. ஒரு குறை என்னவென்றால் இந்த நூல் எழுதிய காலகட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு செல் போனே வரும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-91058528133478238822009-03-09T09:01:00.000-07:002009-03-09T09:02:50.536-07:00ஹரிகாம்போதியில் வர்ணமும் கான்செருக்கு மருந்தும்காலஞ்சென்ற சங்கீத மேதை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரைப் பற்றி பல அருமையான நகைச்சுவை கலந்த விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமானது.<br /><br />கும்பகோணத்தில் இருந்த ஒரு பெரிய டாக்டர் விஸ்வநாத அய்யரிடம் சென்று 'ஹரிகாம்போதி ராகத்தில் வர்ணம் எதுவும் இல்லை. நீங்கள் ஒன்று இயற்றக் கூடாதா?' என்று கேட்டார். இதற்கு அவர் " நீங்க மொதல்ல கான்செருக்கு மருந்து கண்டு பிடிங்கோ, அப்புறம் நான் வர்ணம் பண்ணறேன்!"<br /><br />கலா ரசிகர்களுக்கு எப்பொழுதுமே கலைஞர்களுக்கு ஆலோசனை சொல்லுவதில் ஒரு தனி ஆர்வம். அந்த காலத்தில் இது போன்ற ஆலோசனைகள் கலைஞர்களை ஆதரிக்கும் கனவாங்களிடமிருந்தும் மகாராஜக்களிடமிருந்தும் வருவது சகஜம். கவிஞர்கள், ஓவியர்கள், இசை வல்லுனர்கள் இது போன்ற விருப்பங்களை அடிக்கடி நிறைவேற்றி வைப்பார்கள். குறிப்பாக இந்த முயற்சிகளுக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ப நல்ல சன்மானமும் கிடைத்து. இப்பவும் ரசிகர்கள் அடிக்கடி விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சன்மானம் ???? .......... (சும்மா! ரொம்ப சீரியசா எடுத்துக்க வேண்டாம்! நான் சீட்டில் வரும் பாடல்களைப் பாடுபவர் கட்சி.)Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-49128431031798790652009-02-02T02:45:00.000-08:002009-02-02T02:53:13.164-08:00ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழிசையைப் பற்றி எழுதுகிறார்.http://jeyamohan.in/?p=1416#<br /><br />பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தமிழிசையைப் பற்றி பல நல்ல கருத்துக்களை எழுதியுள்ளார். ஒரே ஒரு விஷயத்தில் அவர் குறிப்பிட்ட சாரங்கதேவர் தமிழரல்ல. இதுபோன்ற எழுத்தாளர்கள் எழுதும்போது கிடைக்கும் ஒரு ஆழமான சிந்தனை வளம் பிற கலைகளுக்கு மிக அவசியம். பொதுவாக கர்நாடக இசையைப் பற்றி தமிழில் எழுதுவதற்கு அதிகபேர் இல்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜெயமோகன் போன்றோர்கள் இந்த மாதிரி எழுதி கர்நாடக இசைக்கு செய்யும் தொண்டு மிக உயர்ந்தது. நன்றி ஜெமோ!Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-3384456813470523972009-01-25T08:17:00.000-08:002009-01-25T17:06:31.831-08:00ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது!இந்த வருடம் குடியரசு தினத்தை ஒட்டி பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பத்ம புஷன் விருது என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் ஒரு மூத்த எழுத்தாளருக்கு இந்த விருது அளிப்பது நம் எல்லோருக்கும் பெருமை அளிக்கக் கூடிய ஒன்றுதான். இருந்தாலும் அவருடைய வயசுக்கும், அனுபவத்துக்கும் தகுதிக்கும் கொடுக்க வேண்டிய விருது பத்ம விபுஷன். அதைக் கொடுக்கவில்லை என்பது ஒரு வித வருத்தம் தான். இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக அவர் எழுதிய ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்ற நூலை படித்து கொண்டு இருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதோடு அந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலையின் பார்வை அற்புதமாக படம் பிடித்து காண்பிக்கிறது.<br /><span></span>Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-2578830706393858592009-01-20T07:41:00.000-08:002009-01-20T07:53:09.661-08:00நாளை மற்றும் ஒரு நாளேG நாகராஜன் எழுதிய "நாளை மற்றும் ஒரு நாளே" நூலைப் படித்தேன். 1973-74 ஆண்டுகளில் எழுதியது என்று நினைக்கிறேன். மிகவும் நவீனமான முறையில் எழுதப்பட்டதுப் போல் இருந்தது. படிக்க ஆரம்பித்தவுடன் கீழே வைக்கத் தோணவில்லை. நடையும் நமது வாசிப்புக்கு ஏற்றதாக இருந்தது. தலைப்பைக் கண்டவுடன் எனக்கு Gone with the Wind நூலில் வரும் கிடைசி வாக்கியம் ஞாபகத்திற்கு வந்தது - "Afterall tomorrow is another day!" பல இலக்கியவாதிகள் இதை ஒரு முக்கியமான நூல் என்று கருதுகிறார்கள். இந்த 'முக்கியமான நூல்' என்கிற ஒரு வாசகமே தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் உபயோகிக்கப் படுகிறது. சங்கீதத்தில் அப்படி ஒரு வாசகத்தை நான் கேட்டதில்லை. இந்த 'முக்கியமான' விஷயங்களை அனுபவிப்பதும் ஒரு தனி இன்பமாகத் தான் இருக்கிறது.<br /><br />இவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் சங்கீதத்தில் "ramnad கிருஷ்ணன் பாட்டைக் கேளுங்கள்! அவர் ஒரு முக்கியமான பாடகர்!"<br /><br />ஜெயகாந்தனின் "ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்" படித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் verbose ஆனாலும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது.Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-77692650214850033742009-01-15T04:59:00.000-08:002009-01-15T09:25:50.343-08:00சமீபத்தில் படித்தவை : தேவிபாரதியும் சுராவும்ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு போவது ரொம்ப பிடிக்கும். குறிப்பாக காலச்சுவடு பத்திரிகையின் ஒரு திட்டத்தின் கிழ் வருடந்தோறும் இலவசமாக புத்தகங்கள் கிடைக்கிறது. இதற்காகவே கண்காட்சிக்கு போவதில் ஒரு தனி ஆர்வம். இந்த வருடம் எடுத்த புத்தகங்களில் இரண்டை உடனே படித்து விட்டேன்.<br /><br /><span style="font-weight: bold;">புழுதிக்குள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சில</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சித்திரங்கள்</span><span style="font-weight: bold;"> - </span><span style="font-weight: bold;">தேவி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பாரதி</span><br /><br />தேவி பாரதி அவர்களின் சில அனுபவங்களை 'வரலாற்றை அறிதல்' என்ற முறையில் எழுதி இருக்கிறார். குறிப்பாக 1977 Emergency காலத்தில் அவருடைய பள்ளி அனுபவங்களும், 1984 தேர்தலின் பொழுது ஒரு சுவர் ஓவியராக வேலை செய்த அனுபவங்களையும் மிக ரசமாகவும் எளிய நடையில் எழுதி இருக்கிறார். படிப்பதற்கும் ரொம்பவும் சுவையாக இருந்தது. இது போன்ற எழுத்துக்களில் தனி நபர்களின் அனுபவங்கள் எப்படி ஒரு கால கட்டத்தின் வராலாற்றுடன் இணைகிறது என்ற ஒரு அழகான வடிவம் கிடைக்கிறது. ஒரு காலகட்டத்தின் வரலாறு பொதுவாக ஒரு academic பார்வையுடன் தான் எழுதப்படும். ஆனால் எல்லோரும் வரலாறு எழுதலாம் என்ற ஒரு தொனியில் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் சேர்க்கும் பொழுது அந்த காலகட்டத்தின் பல அம்சங்கள் நன்றாக விரிவடைகிறது. குறிப்பாக பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, MLA அவர்களின் நடவடிக்கைகள் போன்ற விஷயங்கள் நன்றாகக்க் கையாண்டப்பட்டுள்ளன. பொதுவாக காலச்சுவடு போன்ற சிறு பத்திரிகைகளைப் படிக்கும் பொழுது எழுத்தாளர்களுடைய நவீன மொழி எனக்கு மலைப்பாக இருக்கிறது. நான் படித்த தமிழ் கொஞ்சம் பழமையானது. சுமார் நாற்பதுகளிலிருந்து எழுபதுகள் <span>வரை </span>சொல்லலாம். ஆனால் தேவி பாரதியின் நடையில் எனக்கு அவ்வளவு பிரச்சனைகள் இல்லை.<br /><br /><span style="font-weight: bold;">கிருஷ்ணன்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நம்பி</span><span style="font-weight: bold;"> - </span><span style="font-weight: bold;">சுந்தர</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ராமசாமி</span><br /><br />சாகித்ய அகடெமி<span></span><span></span><span></span><span></span> வெளியிடும் இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் கிருஷ்ணன் நம்பியைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய நூலைப் படித்தேன். இதே வரிசையில் மௌனி மற்றும் தி ஜானகிராமன் அவர்களைப்பற்றிய நூல்களையும் படித்திருக்கிறேன். ஆனால் இதில் சு ரா அவர்கள் கிருஷ்ணன் நம்பி எழுதிய சிறந்த சில சிறுகதைகளின் கதைத் தொகுப்பை வழங்கி அவருடைய தனிப்பட்ட விமர்சனத்தையும் சேர்த்து இருக்கிறார். இந்த நூலைப் படித்து முடித்தவுடன் கிருஷ்ணன் நம்பியின் சிறுகதைத் தொகுப்பை உடனே படக்க வேண்டும் என்று தோன்றுகிறது.<br /><br />MV வெங்கட்ராம் அவர்களின் நித்யகன்னி இப்பொழுது தொடங்கி இருக்கிறேன். இதிகாசத்தை கற்பனைக்கேற்ப விரிவு படுத்தும் ஒரு முயற்சி. கிட்ட தட்ட கோபலகிருஷ்ண பாரதி திருநாளைப்போவார் சரித்திரத்தை நந்தனார் சரித்திரமாக செய்ததைப்போல்.Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-59983142034215209462009-01-15T04:49:00.000-08:002009-01-15T04:57:31.280-08:00கிடைத்தது கமர்கட்!சமீபத்தில் ஜெயா டிவியில் என்னுடைய நிகழ்ச்சியில் 'சின்ன சின்ன ஆசைகள்' என்ற ஒரு பகுதியில் "இந்த காலத்துல கமர்கட் கிடைப்பதில்லை என்று வருத்தப்பட்டேன்." நிகழ்ச்சி ஒளிபரப்பி ஓரிரு வாரத்திற்குள் ஒரு ரசிகர் மதுராந்தகத்திலிருந்து வந்து வீட்டில் செய்த கமர்கட்டைக் <span></span>கொடுத்தார்! இது போன்ற சின்ன ஆசையாயிருந்தால் பரவாயில்லை! ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டால்??? இதற்குத்தான் அந்த காலத்து மகாராஜக்களைப்போல் ஒரு கனவானின் ஆதரவு தேவை!<br /><br />அடுத்து மதுரைக்கு சென்றபொழுதும் ஒரு அன்பர் கமர்கட் கொண்டு கொடுத்தார்! இனி அறுபத்து மூவர் திருவிழா வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-11339901818042262772008-12-12T17:39:00.000-08:002008-12-12T23:02:27.395-08:00தொடங்கிவிட்டது சீசன்சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் 'சீசன்' என்னும் இசை விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலக பொருளாதார நிலையினால் கச்சேரிகளின் எண்ணிக்கை குறையவில்லை! சபாக்களுக்கு டிக்கெட் வசூலில் குறைவு இல்லை ஆனால் கொஞ்சம் கம்பெனிகளின் ஆதரவில் இறக்கம் இருப்பதாகத் தெரிகிறது.<br /><br />ஐந்து வயசிலிருந்து கச்சேரிகளுக்கு போகும் பழக்கம் எனக்கு உண்டு. மியூசிக் அகாடெமியில் கச்சேரி கேட்பதுதான் அப்போ பெரிய விஷயம். அம்மா டிக்கெட் வாங்காமல் கேட்க முடியும் இலவச கச்சேரிகளை போய் கேட்கச் சொல்லுவார். 30 வருஷங்களுக்கு முன்பு மதுரை TN செஷகோபலனின் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். மத்தியானம் 2 மணி, கூட்டம் நெரிக்கும். ஒரு வருஷம் அவருக்கு அடுத்ததாக வைஜயந்தி மாலாவின் நாட்டிய நிகழ்ச்சி இருந்ததால் மேடையில் lighting அதிகம். சேஷகோபாலன் சாரின் பெர்சொனளிட்டி சற்று தூக்கலாகவே இருந்தது!<br /><br />ஜெயா டிவியின் மார்கழி உத்சவம் எனக்கும் மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சி. ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துகே கொண்டு பாடுவது என்று தீர்மானம். இந்த வருடம் நான் என்டுத்துக் கொண்ட தலைப்பு MM தண்டபாணி தேசிகர். இவர் ஒரு வாக்கேயகாரர் , அதாவது ஒரு பாட்டுக்கு இயல் இசை இரண்டையும் இயற்றியவர். இது போல் நமது இசையின் சிறந்த வாகேயக்காரர்களாக சங்கீத மும்மூர்த்திகளைச் சொல்லுவார்கள். இந்த ஆண்டு தேசிகரின் நூற்றாண்டு. ஆகையினால் அவர் இயற்றிய சில பாடல்களையும் அவர் இசை அமைத்த வேறு சிலவர்களின் பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் வழங்கினேன். நல்ல வரவேற்பு. இந்த 'நல்ல வரவேற்பு' என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது எதோ தம்பட்டம் அடித்துக் கொள்வது போல் இருக்கிறது. இதுக்குதான் அப்பப்போ தமிழிலும் எழுத வேண்டும்!<br /><br />பின் குறிப்பு: எல்லா சபாக்களிலும் டிபினுக்கு கான்டீன் வசதி உண்டு. கவனிக்க வேண்டிய ஒரு கான்டீன் ராஜா அண்ணாமலை மன்றத்தில் இருக்கும் தமிழ் இசை சங்கத்தின் கான்டீன். இன்னும் அங்கே தோசை 3 ரூபாய்க்கு கிடைக்குதாம்! அதுவும் ருசியான வெத்தலை தோசை!Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6586346471965534429.post-53332105010237974102008-10-16T03:19:00.000-07:002008-10-16T03:49:09.793-07:00நீ யார் - எழுத்தாளர் சுந்தர ராமசாமியைப் பற்றிய ஆவணப்படம்நேற்று மாலை எழுத்தாளர் சுந்தர ராமசமியப் பற்றிய <span></span>"<span>நீ</span> <span>யார்</span>" என்ற <span>ஆவ</span>அனப்படதைக் பார்த்தேன். படத்தை இயக்கியவர் திரு RV ரமணி. சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் "ஜேஜே சில <span></span>குறிப்புகள்" என்ற நூலை மிகவும் ரசித்துப் படித்தேன். தமிழில் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை உணர்த்துவது போல் இருந்தது. பிறகு பல முறை காலச்சுவடு பத்திரிகையில் வரும் அவருடைய எழுத்துக்களை அவ்வப்போது படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்.<br /><br />நான் அவரை நேரில் பார்த்ததில்லை. ரமணி அவர்கள் இந்த படத்தை எடுத்துக் கொண்டிருப்பதாக எனக்கு சொல்லி இருந்தார். ஆவலுடன் சென்று கண்டு களித்தேன். படத்தில் ரொம்ப பிடிச்ச இடங்களில் அவர் ரெண்டு இளம் பெண்களுடன் நடத்திய பேட்டி, டில்லியில் நடந்தது என்று நினைக்கிறேன். இதில் அவருடைய ஒரு மென்மையான குணமும், நகைச்சுவையும் ஒரு வகையான எதார்த்தமும் அழகாக வெளி வந்தது. <span></span><span></span>அடுத்ததாக அவர் ஆற்றிய உரைகளில் அவருடைய தமிழ் மொழி ஆர்வமும், அந்த மொழியின் மேல் இருக்கும் பற்றும் அதன் இலக்கியம் உயர வேண்டும் என்ற ஆதங்கமும் அப்படியே பொங்கி எழும்புவது தெரிந்தது. அதுவும் அவர் டில்லியில் 'கதா" விருது வாங்கும் இடத்தில் தமிழிலேயே ஆற்றிய உரையும் பிரமாதம்.<br /><br />எழுத்தாளர் சலபதி சொன்னது போல் ஜெஜெவை கண்டிப்பாக இன்னும் இரண்டு முறையாவது படிக்க வேண்டும். படத்தின் இயக்குனர் அவருடைய மரணமும், அதன் பிறகு இறுதிச் சடங்குகள் எதுவும் நடக்கவில்லை என்பதை ஒரு மய்யமாக எடுத்து, பல பேரை இதைப் பற்றி பேட்டி எடுத்து, கையாண்ட விதம் அவ்வளவு ரசிக்கும் படியாக இல்லை. <span></span><span></span><span></span><span></span>மரணமும் இறுதிச் சடங்குகளும் அவ்வளவு முக்கியமான ஒரு அம்சமாக இயக்குனர் நினைதாரானால் மரணத்தைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கலாமே. இதற்கு ஒரு எழுத்தாளரின் மரணம் அவசியம் இல்லையே!<br /><br />தமிழில் எழுதி பழக்கம் இல்லை. இருந்தாலும் ஒரு சுந்தர ராமசாமி 18<span></span><span></span><span></span><span></span> வயதில் தமிழ் எழுத படிக்கக் கத்துக் கொண்டு ௨௩ வயதில் எழுத்தாளராக அவதாரம் எடுக்க முடியும் என்றால் after all ஒரு ப்ளாக்கில் நம்பால எழுத முடியாதா என்ன.<span></span>Sanjay Subrahmanyanhttp://www.blogger.com/profile/03553166723557453259noreply@blogger.com2