Friday, February 12, 2010

சா கந்தசாமியின் சாயாவனம்

சா கந்தசாமி எழுதிய சாயாவனம் சமீபத்தில் படித்தேன். படிக்க படிக்க முதலில் ஞாபகம் வந்தது தில்லு முல்லு படம். அதில் ரஜினி இசை சம்பந்தமாகக் கேட்ட கேள்விக்கு "இவ்வளவு ராகங்கள் இருக்குன்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!" என்பார் தேங்காய் சீனிவாசன். அதே போல தஞ்சாவூர் ஜில்லாவில் இவ்வளவு மரங்கள் இருப்பதை இப்பத்தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். என்ன செய்வது, எல்லாம் ஒரு அர்பன் வாழ்க்கையின் காரணம். நாவல் படிக்க ருசியாகத்தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுப்புரச் சூழலை மையமாகக் கொண்டு எழுதிய ஒரு புரட்சிகரமான நாவல் என்று அறிஞர் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த வகையிலே மிகவும் மென்மையான ஒரு த்வனியில் ஆழமான கருத்தை எடுத்துரைத்திருக்கிறார் திரு கந்தசாமி அவர்கள்.

No comments: