Thursday, January 20, 2011

குளோபல் உணர்ச்சி

கர்நாடக இசை ரசிகர்கள் படிக்க வேண்டிய கதை! இந்த கதையைப் படித்தவுடன் ஒரு சுவராஸ்யமான அனுபவம் ஞாபகத்துக்கு வருது - ஏழு வருஷத்துக்கு முன்பு ஸ்பெயினுக்கு போயிருந்தோம். அங்கு காரவக என்ற சிறிய கூக் கிராமம். உள்ளே செல்லும்பொழுது ஒரு காதொலிக் அக்ரஹாரதிர்குள்  நுழைவது போன்ற அனுபவம். அங்கே ஒரு சின்ன அரங்கத்தில் கச்சேரி. மைக் டெஸ்ட் செய்து கொண்டிருந்தோம். வயலின் கலைஞர் வரதராஜன் கொஞ்சம் நீலாம்பரி வாசித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த ஒரு ஸ்பானிஷ்காரர் என்னிடம் "இதைக் கேட்டால் ஒரு கனவு காண்பது போல் தோன்றுகிறது" என்றார்! ஆமாய்யா எங்க ஊர்லே தாய்மார்கள் குழந்தையைத் தூங்கவைப்பதற்கான தாலாட்டு ராகம்தான் இது. பரவாயில்லியே நம்ம சங்கீதத்திற்கு ஒரு குளோபல் உணர்ச்சி இருக்குடோய்!

1 comment:

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

சஞ்சய்ஜி,

உங்களை ட்விட்டரில் ஃபாலோ பண்ண ஆரம்பித்து இந்த வலைப்பக்கமும் வந்தேன்.

தமிழில், நெட்டில் நான் 15 வருட காலமாக எழுதி வருகிறேன். நேரமிருக்கும்போது கூகுள் பண்ணிப் படித்துப் பாருங்கள். தமிழில் பல விஷயங்களையும் எழுதுவது ஒரு சுவாரசியமான அநுபவம்தான்!

உங்கள் இசை ரசிகன் நான்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்