Tuesday, May 11, 2010

படித்து ரசித்தது - அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு - ஆபிதீன்

இது ஒரு சின்ன சாம்பிள்


"அன்று நான் வீட்டிற்கு வெளியேயுள்ள வராந்தாவில் ரிலாக்ஸ்டாக - 'சாய்' கிடைக்காமல் - சாய்ந்திருந்தேன். தெருவைத்தான் நான் வராந்தா என்று சொல்கிறேன். வீடு அப்படி. வீட்டின் நிலைமை அப்படி. முப்பது வருட அரபுநாட்டு சம்பாத்தியம் என்றால் சும்மாவா? தேரடியிலிருந்து அதிர்ந்தபடி தெருவிற்குள் நுழைந்து, கடற்கரைநகருக்கோ அல்லது அங்கிருந்து குஞ்சாலித்தெருவில் திரும்பி தர்ஹாவுக்கோ விரையும் வாகனங்கள் எழுப்பும் புழுதிதான் எனக்கு புகழுரை. எதிர்வீட்டு ·பர்ஹான்பாய் வீட்டிலிருந்து ஒரு இஸ்லாமியத் தமிழ்ப் பாட்டு கேட்டது. பின்னே, துலுக்கத் தெருவில் 'வினாயகனே வினை தீர்ப்பவனே'யா வரும்? என்றெல்லாம் நீங்கள் துடுக்குத்தனமாக கேட்கக் கூடாது. என்னைப்போல சிலரின் வீட்டிலிருந்து வரும். '(பாலாஜியை நான் தரிசிப்பதற்காக) என்னை யாரும் திட்டலாம். ஆனால் சு(ரு)தியோடு திட்டனும்' என்று கண்டிஷன் போடும் பனாரஸ்கான்கள் போல ஓரிரு கான்கள் எங்கள் ஊரில் இப்போதும் உண்டென்று காண். But they are not Terrorists!"


முழு கதை 

2 comments:

சுந்தர்ஜி said...

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு உங்கள் ஆபிதீனின் ரசனை.அருமை சஞ்சய்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட அவ்வளவு தானா கதை?