Monday, March 9, 2009

ஹரிகாம்போதியில் வர்ணமும் கான்செருக்கு மருந்தும்

காலஞ்சென்ற சங்கீத மேதை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரைப் பற்றி பல அருமையான நகைச்சுவை கலந்த விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமானது.

கும்பகோணத்தில் இருந்த ஒரு பெரிய டாக்டர் விஸ்வநாத அய்யரிடம் சென்று 'ஹரிகாம்போதி ராகத்தில் வர்ணம் எதுவும் இல்லை. நீங்கள் ஒன்று இயற்றக் கூடாதா?' என்று கேட்டார். இதற்கு அவர் " நீங்க மொதல்ல கான்செருக்கு மருந்து கண்டு பிடிங்கோ, அப்புறம் நான் வர்ணம் பண்ணறேன்!"

கலா ரசிகர்களுக்கு எப்பொழுதுமே கலைஞர்களுக்கு ஆலோசனை சொல்லுவதில் ஒரு தனி ஆர்வம். அந்த காலத்தில் இது போன்ற ஆலோசனைகள் கலைஞர்களை ஆதரிக்கும் கனவாங்களிடமிருந்தும் மகாராஜக்களிடமிருந்தும் வருவது சகஜம். கவிஞர்கள், ஓவியர்கள், இசை வல்லுனர்கள் இது போன்ற விருப்பங்களை அடிக்கடி நிறைவேற்றி வைப்பார்கள். குறிப்பாக இந்த முயற்சிகளுக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ப நல்ல சன்மானமும் கிடைத்து. இப்பவும் ரசிகர்கள் அடிக்கடி விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சன்மானம் ???? .......... (சும்மா! ரொம்ப சீரியசா எடுத்துக்க வேண்டாம்! நான் சீட்டில் வரும் பாடல்களைப் பாடுபவர் கட்சி.)